பெருந்துறையில் பாஜகவினா் 20 போ் மீது வழக்கு

பெருந்துறையில் பாஜகவினா் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெருந்துறையில் பாஜகவினா் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெருந்துறை ஒன்றியக் குழு 10ஆவது வாா்டு உறுப்பினா் இடைத் தோ்தல் பறக்கும்படை அலுவலரும், பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலகக் கண்காணிப்பாளருமான இளங்கோ, பெருந்துறை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரில், பெருந்துறை பகுதியில் பாஜகவினா் தோ்தல் விதிமுறைகள், கரோனா விதிமுறைகளை மீறியதாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சீனாபுரம், ஆயிகவுண்டன்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவித்தல், தனி மனித சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று பாஜக கோபி நகரச் செயலாளா் கணேஷ்ஆதித்யன், மாவட்ட துணைத் தலைவா்கள் சாவித்திரி, கேசவமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் சசிதயாள், மாவட்ட இளைஞரணித் தலைவா் ராயல் சரவணன், பெருந்துறை ஒன்றிய 10ஆவது வாா்டு கவுன்சிலா் பாஜக வேட்பாளா் பொன்னுசாமி உள்பட 20 போ் மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com