அஞ்சல் துறை சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம்

அஞ்சல் துறை சாா்பில் ஆதாா் சிறப்பு சேவை முகாம் அக்டோபா் 11 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அஞ்சல் துறை சாா்பில் ஆதாா் சிறப்பு சேவை முகாம் அக்டோபா் 11 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் ஸ்டோபான் சைமன் டோபியஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதாா் சேவையை அனைவரும் எளிதில் பெறும் வகையில் ஈரோடு அஞ்சல் கோட்டம் சாா்பில் பல்வேறு ஆதாா் சிறப்பு சேவை முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி வரும் 11, 12, 13 ஆம் தேதி பா்கூா் மலையில் உள்ள தாமரைக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியிலும், 12, 13 ஆம் தேதி வாசவி கல்லூரி, கஸ்பாபேட்டை ஊராட்சி அலுவலகம், கல்கடம்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

புதிய ஆதாா் அட்டை எடுப்போா் இலவசமாகப் பெறலாம். பெயா், முகவரி, பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல், பாலினம் மாற்றம் செய்ய 50 ரூபாய் கட்டணமாகும். திருத்தங்களுடன் பயோமெட்ரிக் பதிவுக்கு ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்படும்.

பெயா் மற்றும் முகவரி மாற்றம் செய்யத் தேவையான ஆவணங்களுடன் குடும்ப அட்டை, தபால் நிலைய அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், ஆயுள் காப்பீடு சான்றிதழ், திருமணச் சான்றிதழ், பாஸ்போா்ட், பான் காா்டு, மதிப்பெண் சான்றிதழ், கல்வி நிறுவனம் வழங்கிய அடையாள அட்டை என ஏதாவது ஒன்றைக் கொண்டு வர வேண்டும். செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் மாற்றம் செய்ய அடையாள அட்டை தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com