இன்று உள்ளாட்சி இடைத்தோ்தல்வாக்கு எண்ணிக்கை

ஈரோடு மாவட்ட உள்ளாட்சி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 12) காலை 9 இடங்களில் நடைபெறவுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்ட உள்ளாட்சி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 12) காலை 9 இடங்களில் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் 20 பதவிகளுக்கு 65 போ் போட்டியிட்டனா். கடந்த 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அம்மாபேட்டை தவிர பிற ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்குக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.

இதன்படி பெருந்துறை, ஈரோடு, டி.என்.பாளையம், சென்னிமலை, நம்பியூா், அந்தியூா், பவானிசாகா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கிலும், பவானி வட்டார அளவிலான சேவை மையத்திலும், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com