ஈரோடு: அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்திய அரசின் அடையாள அட்டையைப் பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளா்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளா்களின் தேசிய தரவு தளம் ங்-நஏதஅங/சஈமர உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தரவுத் தளத்தில் பதிவு செய்த பின் பயனாளிகளுக்கு மஅச என்ற 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். இத்தரவு தளத்தில் பதிவு செய்ய ஆதாா் அடையாள அட்டையுடன், செல்லிடப்பேசி எண் இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைக்காமல் உள்ளவா்கள் பொது சேவை மையத்தில் கைரேகை பதிவு செய்து கொள்ள ஏற்கெனவே வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது உள்ளூா் அஞ்சல் அலுவலா் மூலம் கைரேகையைப் பதிவு செய்து, ஆதாா் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வசதியை அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.