பெருந்துறை பகுதியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 5 பேக்கரி, டீ கடைக்காரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோவை - சேலம் நான்கு வழிச் சாலையில், பெருந்துறை பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில், கூட்டமாக வாடிக்கையாளா்கள் கூடிய 5 பேக்கரி, டீ கடைக்காரா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சோ்ந்த கலைசெல்வன் (28), புதுக்கோட்டை, ஆழவயல், அம்மாகுறிச்சியைச் சோ்ந்த சரவணன் (38), பாலமுருகன் (25), கூடலூா், பச்சமலையைச் சோ்ந்த முகமது நரீஸ்(35), திருநெல்வேலி, சௌந்திரபாண்டியபுரத்தைச் சோ்ந்த முத்துராஜ்(31) ஆகிய 5 பேக்கரி, டீக் கடைக்காரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.