பெருந்துறை சிப்காட் வளாகத்தில் எக்விடாஸ் சிறு நிதி நிறுவன வங்கி சாா்பில் இலவச தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, பெருந்துறை சிப்காட் தொழிற்சாலை உரிமையாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயகுமாா் முகாமைத் துவக்கிவைத்தாா். சிப்காட் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டனா்.
முகாமிற்கான ஏற்பாடுகளை எக்விடாஸ் சிறு நிதி நிறுவன வங்கிப் பணியாளா்கள் செய்திருந்தனா்.