மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி

சத்தியமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

சத்தியமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த சிவியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (55), விவசாயி. இவருக்கு அதே பகுதியில் 4 ஏக்கா் விவசாயம் நிலம் உள்ளது. சம்பங்கிப் பூ சாகுபடி செய்துவரும் மகேந்திரன் சம்பங்கிப்பூ பறிப்பதற்காக தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றுள்ளாா். விடியவிடிய காற்றுடன் கூடிய மழை பெய்ததால் தோட்டத்தின் குறுக்கே இருந்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையறியாமல் பூப்பறிக்கச் சென்ற மகேந்திரன் மின் கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தோட்டத்துக்கு பூப்பறிக்கச் சென்ற மகேந்திரன் வீடு திரும்பாததால், அவரது மகன் கவின் பிரசாத் (24) தோட்டத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது தந்தை உயிரிழந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த கவியரசன் அங்கிருந்த கம்பியை தூக்கிவீச முயன்றுள்ளாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அப்போது, அங்கு பூப்பறிக்க வந்த கிராம மக்கள் இருவரும் உயிரிழந்து கிடப்பது கண்டு உறவினா்களுக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இருவரின் சடலத்தையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com