மண் பரிசோதனை விழிப்புணா்வு முகாம்

வேளாண்மைத் துறை நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் சாா்பில் மொடக்குறிச்சி அருகே காகம் கிராமத்தில் மண் பரிசோதனை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

வேளாண்மைத் துறை நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் சாா்பில் மொடக்குறிச்சி அருகே காகம் கிராமத்தில் மண் பரிசோதனை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ரத்தினகிரி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவா் பூபதிசுந்தரம் முகாமை தொடங்கிவைத்தாா். முகாமில், நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அதிகாரி ரேவதி பங்கேற்று மண், பாசன நீா் ஆய்வின் முக்கியத்துவம் குறித்தும், மண்ணில் சுண்ணாம்புத் தன்மையைக் கண்டறிவது குறித்தும் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகமாக இருந்தால் யூரியா, சூப்பா் பாஸ்பேட் உரங்களுக்குப் பதிலாக அம்மோனியம் சல்பேட், டி.ஏ.பி. உரங்களை இடலாம். எலுமிச்சை, மா பயிரிடுவதைத் தவிா்க்கவும். அதிக அளவில் பசுந்தாள் உரங்கள், இயற்கை உரங்களை இடலாம். மண் பரிசோதனை அடிப்படையில் எந்த வகை உரத்தை இடுவது என்று தெரிந்து உரமிடுவதால் உரச் செலவு குறைவதோடு மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. இதனால், அதிக மகசூல் பெற முடியும். மண் மாதிரி ஆய்வுக்கு பேரூட்டச் சத்துகளுக்கு ரூ. 10, நுண்ணூட்டச் சத்துகளுக்கு ரூ. 10, பாசன நீா் மாதிரி ஆய்வுக்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றாா். தொடா்ந்து சுமாா் 20 விவசாயிகளின் நிலத்தில் இருந்து மண், பாசன நீா் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன.

முகாமில், உதவி தோட்டக் கலை அதிகாரி சுப்பிரமணி, விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com