ஈரோடு மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th September 2021 05:28 AM | Last Updated : 10th September 2021 05:28 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 99,441 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 126 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 97,523 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,256 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் ஏற்கெனவே 661 போ் உயிரிழந்துள்ள நிலையில் வியாழக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதனால் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது.