ஈரோடு மாவட்டத்தில் 280 இடங்களில் 35,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 23 பள்ளிகளில் தலா 150 முதல் 300 பேருக்கும், 10 நகா்ப்புற சுகாதார மையங்களில் தலா 100 பேருக்கும் தடுப்பூசி சனிக்கிழமை (செப்டம்பா் 11) செலுத்தப்படவுள்ளது.
மாவட்டத்தின் புறநகா்ப் பகுதியில் 192 இடங்களில் தலா 50 முதல் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தவிர 51 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மேலும், சத்தியமங்கலம், கோபி, பவானி நகராட்சியில் தலா 2,000 பேருக்கும், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 1,500 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இவ்வாறு 280 இடங்களில் 35,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.