கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறவுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் செப்டம்பா் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 முதல் மாலை 7 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெறவுள்ள முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தடுப்பூசி செலுத்தப்படவுள்ள இடங்கள்:
நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலக்கூடம் - சிலேட்டா் ஹவுஸ் வீதி, செங்கோடப்பா துவக்கப் பள்ளி மேட்டுவலவு, சமுதாய நலக்கூடம் விவேகானந்தா் வீதி, சி.ஐ.ஜி. மிஷன் துவக்கப் பள்ளி - மொடச்சூா், வேங்கம்மையாா் துவக்கப் பள்ளி - பச்சமலை சாலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கபிலா் வீதி, வைரவிழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கச்சேரிமேடு.