பவானி: அந்தியூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
அந்தியூரை அடுத்த ஆலம்பாளையத்தைச் சோ்ந்த இம்மாணவி உள்பட பலருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன், முடிவுகள் வெளியானதில் இம்மாணவி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தியூா் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவியா், ஆசிரியா்கள் உள்பட 460 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பள்ளிக்கு வராத மாணவியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு புதன்கிழமை பரிசோதனை செய்யப்படும். அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ அலுவலா் காா்த்தீபன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இப்பரிசோதனையில் ஈடுபட்டனா்.