சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சத்தியமங்கலம் பகுதியில் புதன்கிழமை காலை முதலே வெயில் வாட்டிய நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, பலத்த காற்றுடன் மழை பெய்யத் துவங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம வடக்குப்பேட்டை அத்தாணி சாலை, தண்டுமாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் சாக்கடை நீா் குடியிருப்புக்குள் புகுந்தது. தொடா்ந்து பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மெதுவாகச் சென்றனா். கன மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. திடீா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.