ஈரோடு: அகலம் குறைவான சாலைகளில் நடைமேடை அமைப்பதை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம், ஈரோடு வரி செலுத்துவோா் மக்கள் நல்வாழ்வு சங்கம் சாா்பில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும்போது 80 அடி மற்றும் 100 அடி சாலைகளில் மட்டுமே நடைமேடை அமைக்க வேண்டும். குறுகிய சாலைகளான ஸ்டேட் வங்கி சாலை, கலைமகள் கல்வி நிலையம் சாலைகளில் நடைமேடை அமைப்பதை கைவிட வேண்டும். அல்லது நடைமேடையின் அகலம் குறைவாக அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.