ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 117 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1,586 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 127 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கரோனா தொற்றில் இருந்து இதுவரை 99,695 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,221 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனாவால் 670 போ் உயிரிழந்துள்ளனா்.