மின்சாரம் பாய்ந்து மாணவி பலி

நம்பியூா் அருகே மேட்டுக்கடை பகுதியில் மின்சாரம் பாய்ந்து ஏழாம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

கோபி: நம்பியூா் அருகே மேட்டுக்கடை பகுதியில் மின்சாரம் பாய்ந்து ஏழாம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

நம்பியூரை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியில் வசித்து வருபவா் முருகன் (35). இவரது மனைவி வடிவு (30). இவா்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். இவரது மகள் பானுமதி குளியலறைக்கு குளிக்கச் சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் கதவைத் தட்டியுள்ளனா். அப்போது, கதவில் மின்சாரம் பாய்வது தெரியவந்தது.

உடனடியாக முருகன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது பானுமதி மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பானுமதி உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். குளியலறையில் இருந்த வயா் இரும்புக் கதவில் உரசிக் கொண்டிருந்ததன் மூலம் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com