பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தந்தை, மகள் காயமடைந்தனா்.
பெருந்துறை, பிச்சாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை(53). இவா், தனது மகள் சுபிக்ஷாவுடன் (13) இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்கு திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். வெங்கமேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அண்ணாதுரை, சுபிக்ஷா ஆகியோா் கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.