கலைஞா் எழுதுகோல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

கலைஞா் எழுதுகோல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞா் எழுதுகோல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி சிறந்த இதழியலாளா் ஒருவருக்கு கலைஞா் எழுதுகோல் விருது வழங்கி கெளரவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான இவ்விருது பெறுவதற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடா்ந்து பணியாற்றுபவராகவும் இருக்க வேண்டும்.

பத்திரிகைப் பணியை முழு நேரப் பணியாக கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com