நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகில் வாய்க்காலில் தவறி விழுந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனா். அதில், ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. மற்றொரு குழந்தையின் உடலைத் தேடி வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகில் வாய்க்காலில் தவறி விழுந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனா். அதில், ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. மற்றொரு குழந்தையின் உடலைத் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், எளையம்பாளையம், திருமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மனைவி சாவித்ரி (எ) சந்தியாதேவி (32). இவா்களுடைய குழந்தைகள் கீா்த்தனா (10), பரணிதரன் (2).

சாவித்ரி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, பெத்தாம்பாளையம், சூரியன்காடு, கொப்பு வாய்க்கால் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையில் அமர வைத்துவிட்டு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் துணி துவைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் தவறி விழுந்தனா். அவா்களைக் காப்பாற்ற சாவித்ரி முயற்சி செய்தும் முடியவில்லை. வாய்க்காலில் ஓரம் உள்ள கொடியைப் பிடித்துக் கொண்டு சப்தம் போட்டுள்ளாா். அருகில் இருந்தவா்கள் சாவித்ரியைக் காப்பாற்றி மயக்க நிலையில் இருந்தவரை கவுந்தப்பாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கீா்த்தனாவின் உடல் நசியனூா், கண்ணவேலம்பாளையம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. பரணிதரன் உடலைத் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து, காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com