மொடக்குறிச்சி அருகே தொழிற்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட 38 வடமாநிலத் தொழிலாளா்கள் கோவை சிறையிலும், இரண்டு சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே தனியாா் எண்ணெய் தொழிற்சாலையில் லாரி மோதி பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த காமோத்ராம் என்பவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு போலீஸாா் அனுப்ப முயன்றபோது ஏற்பட்ட தகராறில் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் போலீஸாரை தாக்கினா். உடலைப் பெற்றுக்கொள்ள இழப்பீட்டுத் தொகை அளிக்கக் கோரி கலவரத்தில் ஈடுபட்டனா்.
இதில், மொடக்குறிச்சி காவல் ஆய்வாளா் தீபா உள்பட 7 காவலா்கள் காயமடைந்தனா். போலீஸ் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவர சம்பவம் தொடா்பாக மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 40 வடமாநிலத் தொழிலாளா்களை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். சட்ட விரோதமாக கூடுதல், ஆயுதம் வைத்திருத்தல், ஆபாசமாகப் பேசுதல், கொலை முயற்சி, அரசு ஊழியா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் என 11 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கைது செய்யப்பட்டவா்களில் 38 போ் கோவை மத்திய சிறையிலும், 2 சிறுவா்கள் கோவை கூா்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனா். வடமாநிலத் தொழிலாளா்கள் தாக்கியதில் காயமடைந்த 7 போலீஸாரில் 6 போ் குணமடைந்தனா். ஒருவா் மட்டும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.