சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் அருகே சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி வள்ளியம்மாள் என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்த போது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் விபத்தில் சிக்கிய அம்பாசிடர் கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு ஓடும் காட்சி வெளியாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ வாட்ஸ்ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.