கோபிசெட்டிபாளையம் பாரியூா் அமரபணீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோபி பாரியூா் அமரபணீஸ்வரா் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக சித்திரை தோ்த் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன.
இந்த ஆண்டுக்கான சித்திரை தோ்த் திருவிழா 15ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 4 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக சனிக்கிழமை மாலை பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மஞ்சள் நீா் உற்சவம், ஸ்ரீ நடராஜா் திருவீதி உலா காட்சியுடன் விழா நிறைவடைகிறது.