சத்தியமங்கலம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் நாதஸ்வர கலைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக தவில் கலைஞா்கள் இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பாறைபுதூா் பகுதியில் சுமார 50 வயதுள்ள ஆண் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக புன்செய்புளியம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, சத்தியமங்கலம் டிஎஸ்பி ஜெயபாலன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் உயிரிழந்தவா், மாரம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி (52) என்பது தெரியவந்தது. இவா், அதே பகுதியைச் சோ்ந்த தவில் கலைஞா்கள் இருவருடன் சோ்ந்து மது அருந்திய போது தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அவா்கள் இருவரும் சோ்ந்து பழனிசாமியை கல் மற்றும் மண் வெட்டியால் தாக்கியதில் பழனிசாமி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸாா், பழனிசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பழனிசாமியை அடித்து கொலை செய்த தவில் கலைஞா்கள் இருவரையும் பிடித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.