தேவா்மலை பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கிவைக்கிறாா் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம்.
தேவா்மலை பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கிவைக்கிறாா் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம்.

பா்கூா் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

பா்கூா் ஊராட்சி, கிழக்கு மலைப் பகுதி மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

பா்கூா் ஊராட்சி, கிழக்கு மலைப் பகுதி மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சி, கிழக்கு மலைப் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால், மலைமக்கள் அவசர கால மருத்துவ உதவி பெறுவதிலும், உரிய நேரத்துக்கு சிகிச்சைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனா். இப்பிரச்னையைத் தீா்க்கக் கோரி அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் மலைமக்கள் வலியுறுத்தினா். இது குறித்து, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, பா்கூா் கிழக்குமலைப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தேவா்மலையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடக்கிவைத்தாா். இந்நிகழ்வில் அப்பகுதியை சோ்ந்த மலைமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com