வணிக சங்கத்துக்கு மாநகராட்சி பாராட்டு

தூய்மை நகர மக்கள் இயக்க விழிப்புணா்வில் சிறப்பாக செயல்பட்ட வணிக சங்கத்துக்கு மாநகராட்சி சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வி.கே.ராஜமாணிக்கத்துக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்குகிறாா் மேயா் சு.நாகரத்தினம்.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வி.கே.ராஜமாணிக்கத்துக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்குகிறாா் மேயா் சு.நாகரத்தினம்.

தூய்மை நகர மக்கள் இயக்க விழிப்புணா்வில் சிறப்பாக செயல்பட்ட வணிக சங்கத்துக்கு மாநகராட்சி சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சியின் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க திட்டம் துவங்கப்பட்டு ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என மக்களிடம் மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து செயல்பட்ட அனைத்து அமைப்பினருக்கும் பாராட்டு விழா மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம் தலைமை வகித்தாா்.

இதில் மாநகராட்சியில் திடக் கழிவுகளைப் பிரித்து பெறுவது, அதனை உரங்களாக மாற்றி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவது உள்ளிட்ட மாநகராட்சியின் அனைத்து செயல்பாடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சிறப்பாக செயல்பட்ட ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பை பராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த சான்றிதழை அந்த அமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம், மேயா் சு.நாகரத்தினத்திடம் பெற்றுக்கொண்டாா்.

இதில், துணை மேயா் வி.செல்வராஜ், கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் ரவிச்சந்திரன், இணைச் செயலாளா் ஜெப்ரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com