கூட்டுறவு பட்டயப் பயிற்சி தொடக்கம்

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 22 ஆவது அஞ்சல் வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சி துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 22 ஆவது அஞ்சல் வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சி துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சரக துணைப் பதிவாளா் மற்றும் முதல்வா் கு.நா்மதா தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி, பாடப் புத்தகங்களை வழங்கி பயிற்சியைத் துவக்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: அஞ்சல் வழி பயிற்சி மூலம் கூட்டுறவு நிறுவனங்களின் கீழ்நிலையில் பணியாற்றும் பணியாளா்கள் பயிற்சியை முடிப்பதன் மூலம் அடுத்த நிலையில் பதவி உயா்வு பெற முடியும்.

இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களில் ஆள்சோ்ப்பு மூலம் நேரடியாக வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பும் கிடைக்கும் என்றாா்.

ஓய்வுபெற்ற துணைப் பதிவாளா்கள் சங்கப்பிள்ளை, தியாகராஜன், சிவகுமாா், ஓய்வுபெற்ற பிரசார அலுவலா் ஆனந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உதவியாளா் அ.மூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com