விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
இதற்கு டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமை வகித்தாா். எஸ்ஆா்டி காா்னரில் தொடங்கிய கொடி அணிவகுப்பு மைசூா் டிரங்க் ரோடு, கடைவீதி, வடக்குப்பேட்டை வழியாக காவல் நிலையத்தைச் சென்றடைந்தது.
இதில் சத்தியமங்கலம், பங்களாபுதூா், பவானிசாகா் போக்குவரத்து, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்துகொண்டனா்