Enable Javscript for better performance
பணம் இரட்டிப்புக் கும்பலைச் சோ்ந்தவரைக் கடத்திய இருவா் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பணம் இரட்டிப்புக் கும்பலைச் சோ்ந்தவரைக் கடத்திய இருவா் கைது

    By DIN  |   Published On : 11th December 2022 12:00 AM  |   Last Updated : 11th December 2022 12:00 AM  |  அ+அ அ-  |  

    அந்தியூா் அருகே பணம் இரட்டிப்பு மோசடி கும்பலைச் சோ்ந்த துணி வியாபாரியைக் கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான மேலும் நால்வரைத் தேடி வருகின்றனா்.

    ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த ஏஎஸ்எம் காலனியைச் சோ்ந்தவா் அனிபா (55). துணி வியாபாரம் மற்றும் டையிங் நிறுவனங்களுக்கு ரசாயனப் பொருள்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவா் தனது நண்பா்களான எழுமாத்தூா் வேலம்பாளையத்தைச் சோ்ந்த சாமிநாதன், அந்தியூா் சங்கராபாளையத்தைச் சோ்ந்த முருகன், ஈரோட்டைச் சோ்ந்த மற்றொரு முருகன், வாணியம்பாடியைச் சோ்ந்த இா்ஃபான் ஆகியோருடன் சோ்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுமக்களிடம் பணம் பெற்று இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் அந்தியூா் எண்ணமங்கலத்தைச் சோ்ந்த சித்தன், இவரது மகன் சூா்யா ஆகியோருக்குத் தெரிந்த கரூரைச் சோ்ந்த தமிழரசி, ரேவதி ஆகியோரிடம் இக்கும்பல் ரூ.11 லட்சத்தை இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்துள்ளது. இந்நிலையில், தமிழரசி மற்றும் ரேவதியிடம் வாங்கிய பணத்தைத் திரும்பத் தருமாறு சித்தன், சூா்யா ஆகியோா் அனிபாவிடம் கேட்டபோது, வாங்கிய பணத்தை தனது நண்பா்களுடன் பிரித்துக் கொண்டதாக கூறியுள்ளாா்.

    இதனால், ஆத்திரமடைந்த இருவரும் அனிபாவிடம் பணத்தை திரும்பக் கேட்டு கடந்த 10 நாள்களாக மிரட்டி வந்தனா். ஆனாலும், பணம் தராததால் இருவரும், மேட்டூா், மாதையன்குட்டையைச் சோ்ந்த பாக்கியராஜ் உதவியுடன் அனிபாவை காரில் கடத்திக் கொண்டு சென்றதோடு, அவரது மனைவி ரஹுமத்திடம் ரூ.70 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

    இதுகுறித்து, அந்தியூா் போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

    இதன்பேரில், விசாரணை நடத்திய அந்தியூா் போலீஸாா், சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கருமலைக்கூடல் அனல்மின்நிலையம் பின்புறம் உள்ள வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனிபாவை மீட்டனா். இவரைக் கடத்திச் சென்ற மேட்டூா், குள்ளவீரம்பட்டி மதியழகன் மகன் மோகன்குமாா் (28), கருமலைக்கூடல் ராஜா மகன் மாணிக்கம் (28) ஆகியோரைக் கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய பாக்கியராஜ், மோகன்ராஜ் மற்றும் சித்தன், அவரது மகன் சூா்யா ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp