முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ரூ.58 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
By DIN | Published On : 07th February 2022 12:03 AM | Last Updated : 07th February 2022 12:03 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2,010 கிலோ தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.31க்கும், குறைந்தபட்சமாக ரூ.26க்கும், சராசரியாக ரூ.30க்கும் ஏலம் போனது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.58 ஆயிரத்து 160. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செய்திருந்தனா்.