மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரத்தில் அரசு துவக்கப்பள்ளி கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, லக்காபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் எல்.பி.சாலைமாணிக்கம் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் வேலுச்சாமி முன்னிலை வகித்தாா்.
ஈரோடு ஆற்றல் பவுண்டேசன் அமைப்பின் முயற்சியால் புரவலா்கள்,
சமூக ஆா்வலா்கள் உதவியுடன் பள்ளியின் வகுப்பறை கட்டடங்கள்
மற்றும் கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு,, வா்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு பள்ளி நிா்வாகத்திடம் ஆற்றல் பவுண்டேசன் அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஆற்றல் அசோக் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.
இதில், செண்பககிரி விசைத்தறி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவா் எல்.ஆா்.சண்முகம், லக்காபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தங்கமணி சீனிவாசன், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.