அரசு ஊழியா்கள் தபால் வாக்கு செலுத்தினா்

தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் திங்கள்கிழமை தபால் வாக்கு செலுத்தினா்.
அரசு ஊழியா்கள் தபால் வாக்கு செலுத்தினா்

தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் திங்கள்கிழமை தபால் வாக்கு செலுத்தினா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், போலீஸாா், ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு அலுவலகங்களில் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப் பெட்டியில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் வாக்கினை செலுத்தினா். இந்த பெட்டி பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐஆா்டிடி கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com