பெருந்துறை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் தந்தையும், மகனும் வெற்றி பெற்றுள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, வாா்டு 13இல் செல்வம் என்பவா் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். இவா் மகன் கோகுல்குமாா் 15ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். ஒரே பஞ்சாயத்தில் தந்தையும், மகனும் வெற்றி பெற்றுள்ளனா்.