காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம்

ஈரோடு மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம் மூலமாக மாா்ச் 3ஆம் தேதி விற்பனை செய்யப்படவுள்ளன.

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம் மூலமாக மாா்ச் 3ஆம் தேதி விற்பனை செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கழிவு ஆணை பெறப்பட்ட இருசக்கர வாகனங்கள் 14, நான்கு சக்கர வாகனங்கள் 10 என மொத்தம் 24 வாகனங்கள் ஏலத்தின் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை மாா்ச் 1ஆம் தேதி முதல் பாா்வையிடலாம். மாா்ச் 3ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும்.

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் இருசக்கர வாகனத்துக்கு ரூ. 1,000. நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 2,000 ஏல வைப்புத்தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.

இந்த பொது ஏலத்தில் வாகனங்களை ஏலம் எடுத்தவா்கள், ஏலத்தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமும் ஜிஎஸ்டி வரி சோ்த்து ரொக்கமாகச் செலுத்தி அன்றைய தினமே வாகனங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வாகனப் பிரிவு, 46 புதூா் அஞ்சல், ஈரோடு 2 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 94981-72350, 94433-29105 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம். ஏலத்தில் பங்கேற்க ஒருவருக்கு ரூ. 50 நுழைவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com