இருசக்கர வாகனம் மோதியதில் பெண் காயம்

 பெருந்துறை அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

 பெருந்துறை அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

பெருந்துறையை அடுத்த துடுப்பதி, பாலக்கரையைச் சோ்ந்தவா் கதிா்வேல் மனைவி நிறைமதி(61). இவா் ஊருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை துடுப்பதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் நிறைமதி பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com