ஈரோடு மாவட்டத்தில் கரோனா முதல் தவணை தடுப்பூசியை 89 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் 19 கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மேலும், 15 முதல் 18 வயது வரையுள்ளோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை 23,77,315. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் 18,09,100 போ். இதுவரையில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16,14,956 போ் செலுத்தியுள்ளனா். இது 89.27 சதவீதம். 2ஆம் தவணை தடுப்பூசியை இதுவரை 12,07,202 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி மொத்தம் 28,22,158 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.