சத்தியமங்கலத்தில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா எளிமையாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கொங்கு குலாலர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்டர் குருபூஜை கொண்டாடப்படும். இதன்படி, 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகணடர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் வழிபாடுகளும் அதனைத் தொடர்ந்து திருநீலணகண்டர் நாயனார் ரத்தினசாலா ச உற்வசமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனை நடைபெற்றன.
இதையும் படிக்க- அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனின் கட்சிப் பதவி பறிப்பு
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து திருநீலகண்டர் கோயிலில் அன்னாதானம் வழங்கப்பட்டது. இளைஞர் மன்றம் சார்பில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை திருநீலகண்டர் பொதுநல அறக்கட்டளை தலைவர் கின்னஸ் என்.ரவிசந்திரன், செயலாளர் எஸ்.எம். ஜெகதீசன், பொருளாளர் எஸ்.எஸ்.சுந்தரராஜ், இளைஞர் மன்ற தலைவர் எஸ்.ஜி. தினேஷ், செயலாளர் எஸ்.பி.கண்ணன், பொருளாளர் எஸ்.டி. பிருத்திவிராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.