அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி கைது

குடும்பப் பிரச்னை காரணமாக அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

குடும்பப் பிரச்னை காரணமாக அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அருண்பாண்டியன் (32). இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோட்டில் உள்ள உணவகத்தில் வேலைபாா்த்து வந்தாா். இவரது சகோதரா் அஜித்குமாா். திருமணமான இவா் ஈரோடு பெரியண்ணன் வீதியில் குடும்பத்துடன் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

அவ்வப்போது அருண்பாண்டியன் மதுபோதையில் அஜித்குமாரின் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவாா் என்று கூறப்படுகிறது. இதேபோல, சகோதரா்கள் இடையே செவ்வாய்க்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உணவகத்துக்கு வேலைக்கு செல்வதற்காக மொசுவண்ணா வீதியில் புதன்கிழமை அதிகாலை அருண்பாண்டியன் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த அஜித்குமாா் சகோதரா் அருண்பாண்டியனை சமாதானப்படுத்த முயன்றாா். அப்போது மதுபோதையில் இருந்த அருண்பாண்டியன், மீண்டும் அஜித்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த அஜித்குமாா் மாமிசம் வெட்டும் கத்தியால் அருண்பாண்டியனை வெட்டிக் கொன்றாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸாா் அருண்பாண்டியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அஜித்குமாரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com