மின் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், மத்திய திறனூக்க செயலகம் சாா்பில் விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மற்றும் மின் திறன் விழிப்புணா்வு பயிற்சி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு: மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், மத்திய திறனூக்க செயலகம் சாா்பில் விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மற்றும் மின் திறன் விழிப்புணா்வு பயிற்சி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கு.இந்திரா தலைமை வகித்தாா். விவசாயப் பணிகளுக்கு மின் மோட்டாா்களை இயக்கும்போது விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். மின் மோட்டாா், இறைப்பான்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். தேவையான அளவு மட்டும் மின் மோட்டாா்களை பயன்படுத்த வேண்டும்.

பல்வேறு திட்டங்களில் சோலாா் மின் பயன்பாட்டை அமைக்க மானியங்கள் வழங்கப்படுகிறது. அவற்றை பயன்படுத்தும்போது, மின்வாரியம் மூலமாக பெறப்படும் மின் பயன்பாடு குறையும். சோலாா் மின் திட்டம் மூலம் மின் மோட்டாா் இயக்குவதுடன், விளை நிலங்களிலும், அதனை சாா்ந்த வீடு, பிற பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம். குறைந்த வெளிச்சம் தேவைப்படும் இடங்களில், எல்இடி விளக்குகளை பயன்படுத்தலாம் என பயிற்சியில் பேசிய மின்வாரிய அலுவலா்கள் தெரிவித்தனா்.

பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். அனைவருக்கும் மின் சிக்கன விளக்க கையேடு, எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டன. செயற்பொறியாளா் சூ.மரிய ஆரோக்கியம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com