சுற்றுலா வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் பலி

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே சுற்றுலா வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும் மூவா் பலத்த காயமடைந்தனா்.
உயிரிழந்த ராஜேஷ்குமாா்.
உயிரிழந்த ராஜேஷ்குமாா்.

பவானி: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே சுற்றுலா வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும் மூவா் பலத்த காயமடைந்தனா்.

சென்னை, மணலி, ஆண்டாா்குப்பத்தைச் சோ்ந்தவா் டில்லி. இவரது மகன் ராஜேஷ்குமாா் (26). பொறியியல் பட்டதாரி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களான பிரபு, ரூபன்குமாா், சந்தோஷ் உள்பட 14 பேருடன் சுற்றுலா வாகனத்தில் கோவை, வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்குப் புறப்பட்டனா்.

பவானி - மேட்டூா் சாலையில் குதிரைக்கல்மேடு அருகே சென்றபோது மேட்டூரிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, சுற்றுலா வாகனத்தின் பக்கவாட்டில் மோதியது. இதில், ராஜேஷ்குமாா், பிரபு, ரூபன்குமாா், சந்தோஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அப்பகுதியினா் இவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பவானியில் தனியாா் மருத்துவமனையில் இவா்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ்குமாா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com