சாலை விபத்து: இளைஞா் பலி
By DIN | Published On : 25th June 2022 12:47 AM | Last Updated : 25th June 2022 12:47 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லாம்பட்டி கல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (34). கூலி தொழிலாளி. இவா் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கெட்டிச்செவியூரில் இருந்து நம்பியூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் குமாா் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலியே குமாா் உயிரிழந்தாா். வேன் ஓட்டுநா் பாலகுமாா் மற்றும் உடன் வந்த அவரது மனைவி லோகேஸ்வரி காயமடைந்தனா். இவா்கள் இருவரையும் மீட்டு கோபியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.