மது போதையில் நண்பனைக் கொலை செய்த இளைஞா் கைது

அந்தியூரில் மது போதையில் நண்பனின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அந்தியூரில் மது போதையில் நண்பனின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அந்தியூா் - அத்தாணி சாலையில் தவிட்டுப்பாளையம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு அருகே சாக்கடையில் கோபியை அடுத்த வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சதீஸ் (32) கடந்த 21ஆம் தேதி உயிரிழந்து கிடந்தாா்.

இது குறித்த தகவலின்பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் கோபி, மொடச்சூரைச் சோ்ந்த மோகனசுந்தரம் மகன் காா்த்தி (26) என்பவரைப் பிடித்து விசாரிக்கையில், சதீஸைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்தியைக் கைது செய்த அந்தியூா் போலீஸாா், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com