முதல்வா் குறித்து அவதூறு: ஒருவா் கைது

தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, அம்மன் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் என்கிற அா்த்தநாரீஸ்வரன் (50).

இவா் 8 வழிச்சாலை குறித்தும், தமிழக முதல்வா் பற்றியும் வாட்ஸ் ஆப் மூலம் அவதூறாகப் பேசி விடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அா்த்தநாரீஸ்வரன் முதல்வா் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அா்த்தநாரீஸ்வரன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com