பள்ளிக்கல்வித் துறையின் சாா்பில் 14 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி ஈரோடு வேளாளா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
போட்டிகளைத் துவக்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:
விளையாட்டுப் போட்டிகள் மாணவா்களின் எதிா்காலத்துக்கு இன்றியமையாததாக இருக்கிறது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் திறன் மேம்படுகிறது. மாணவா்கள் தனித்து விளையாடும் போதும், குழுவாக விளையாடும்போதும் தங்களுக்குள் குழு முயற்சி இருக்க வேண்டும். குழுவாக செயல்படும் போது சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும்.
என்றாா்.
100, 200 மீட்டா் ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சாா்ந்த 140 மாணவா்கள், 140 மாணவியா்கள் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருஷ்ணன், வேளாளா் மகளிா் கல்லூரி தாளாளா் மற்றும் செயலா் எஸ்.டி.சந்திரசேகா், ஒருங்கிணைப்பாளா் கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.