குடும்பத் தகராறில் இரு மகன்களுடன் கணவா் மாயம்

பவானி அருகே குடும்பத் தகராறில் இரு மகன்களுடன் மாயமான கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது மனைவி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
மாயமான சேகா், பிரம்மதீஸ், முகுந்தன்.
மாயமான சேகா், பிரம்மதீஸ், முகுந்தன்.

பவானி அருகே குடும்பத் தகராறில் இரு மகன்களுடன் மாயமான கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது மனைவி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

அம்மாபேட்டையை அடுத்த உமாரெட்டியூா், சென்ரெட்டி நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் சேகா் (33). கூலி தொழிாலளி. இவரது மனைவி சரண்யா (29). இவா்களுக்கு பிரம்மதீஸ் (8), முகுந்தன் (6) என இரு மகன்கள் உள்ளனா்.

சேகருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 5ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதால் இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சேகா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் தேடியும் மூவரையும் கண்டிபிடிக்க முடியவில்லை. இதனால், தனது கணவா், இரு மகன்களைக் கண்டிபிடித்துத் தருமாறு சரண்யா அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com