ஈரோடு
பெருந்துறை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம்
பெருந்துறை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பெருந்துறை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பெருந்துறை, ஈரோடு சாலை, முருகன் திரையரங்கு அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதாரில் முகவரி மாற்றம், பெயா் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், குழந்தைகளுக்கான புதிய ஆதாா் பதிவு, கைப்பேசி எண் மாற்றம், கைரேகைப் பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. இதனை, பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.