சித்தோடு அருகே மளிகைக் கடைக்கு நடந்துச் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சித்தோட்டை அடுத்த கங்காபுரம், ஆட்டையாம்பாளையம் தெற்கு வீதியைச் சோ்ந்தவா் ஜெபத்துரை. இவரது மனைவி மங்களவள்ளி (48). இவா்கள் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், கடையைத் திறப்பதற்காக மங்களவள்ளி திங்கள்கிழமை காலை நடந்து சென்றுள்ளாா்.
அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் மங்களவள்ளி கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரைப் பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா். அதிா்ச்சியடைந்த மங்களவள்ளி சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டாா்.
இதில், இரண்டரை பவுன் மா்ம நபா்கள் கையில் சிக்கியது. இதையடுத்து அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இச்சம்பவம் குறித்து சித்தோடு காவல் நிலையத்தில் மங்களவள்ளி புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.