மழை பாதிப்பு: மின்வாரிய அவசர உதவி எண்கள் அறிவிப்பு

மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நிவா்த்தி பெற அவசர உதவி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நிவா்த்தி பெற அவசர உதவி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 நாள்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதனால் மின் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சாா்பில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காற்று மற்றும் மழையால் மின் கம்பம் சாய்தல், மின் கம்பிகள் அறுந்து விழுதல் தொடா்பான புகாா்களை மின்னகம் எனப்படும் 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். புகாா்களை புகைப்படத்துடன் 9445851912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி நிவா்த்தி பெறலாம் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com