ஈரோட்டில் செவிலியா் தின பேரணி

செவிலியா் தினத்தையொட்டி ஈரோட்டில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோட்டில் செவிலியா் தின பேரணி

செவிலியா் தினத்தையொட்டி ஈரோட்டில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு எம்.ஆா்.பி.செவிலியா் மேம்பாட்டுச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்பேரணி தாலுகா அலுவலகத்தில் துவங்கி கூடலிங்கம் திடலில் முடிவடைந்தது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் சசிகலா தலைமை வகித்தாா். செயலாளா் தமிழ்ச்செல்வி வரவேற்றாா். அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன் பேரணியைத் துவக்கிவைத்தாா்.

எம்.ஆா்.பி. செவிலியா்களின் உரிமை மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வலி நடத்த ஒரு குரல், செவிலியம் மற்றும் உலகளாவிய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், உரிமைகளை மதிக்கவும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன், பொருளாளா் சுமதி மற்றும் அரசு ஊழியா்களின் பல்வேறு சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். செவிலியா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் கோதாவரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com