ஈரோடு மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (மே14) அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் ஒரு வட்டத்துக்கு ஒரு நியாய விலைக் கடையில் நடைபெறும். இதில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலமாகத் தெரிவிக்கலாம்.
ஈரோடு வட்டத்தில் கருங்கல்பாளையம், பெருந்துறை வட்டத்தில் திருவேங்கடம்பாளையம் புதூா், மொடக்குறிச்சி வட்டத்தில் கரும்பாறை (முள்ளாம்பரப்பு), கொடுமுடி வட்டத்தில் வேலாயுதம்பாளையம், கோபி வட்டத்தில் பாஸ்கரா 2, நம்பியூா் வட்டத்தில் குருமந்தூா், பவானி வட்டத்தில் மைலம்பாடி, அந்தியூா் வட்டத்தில் பட்லூா், சத்தியமங்கலம் வட்டத்தில் பட்ரமங்கலம், தாளவாடி வட்டத்தில் கரளவாடி ஆகிய நியாய விலைக் கடைகளில் முகாம் நடைபெறும்.
இந்த முகாம்களைக் கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் பொது விநியோகத் திட்டக் குறைபாடுகள் குறித்து முகாமில் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.