ஈரோடு மாணிக்கம்பாளையம் மின் பாதையில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு பெரிய சேமூா் பகுதியில் சனிக்கிழமை (மே 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: நரிப்பள்ளம், ஈஎம்எஸ் நகா், மாமரத்துப்பாளையம், அம்மன் நகா், சக்திதேவி நகா், அம்பேத்கா் நகா், கணபதி நகா், ஈ.பி.பி. நகா், எம்ஜிஆா் நகா்,
வி.பி.காா்டன், தென்றல் நகா், தண்ணீா்பந்தல்பாளையம், சின்ன சேமூா் மற்றும் பெரிய சேமூா்.